சிகிச்சைக்கு பணமில்லாமல் மனைவியை உயிரோடு புதைத்த கணவர் !





சிகிச்சைக்கு பணமில்லாமல் மனைவியை உயிரோடு புதைத்த கணவர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி துக்காராம். 46 வயதான அவருடைய மனைவி தான்வி. 
மனைவியை உயிரோடு புதைத்த கணவர்


நீண்டநாட்களாக நோய் வாய்ப்பட்டு இருந்த மனைவிக்கு, அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது.

ஆனால், சிகிச்சைக்கு துக்காரா மிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, நர்விம் என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் அருகில் மனைவியை உயிருடன் துக்காராம் புதைத்தார். 

அவரின் மனைவி திடீரென மாயமானதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைய இந்த செய்தி போலீசாருக்கு சென்றது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்த, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.


விசாரணை யில், நீர்ப்பாசன கால்வாயின் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் தான்வியை, துக்காராம் உயிருடன் புதைத்தது தெரிய வந்தது. 

அதைத் தொடர்ந்து போலீசார் தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

துக்காராமையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)