நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்த வெளியுறவுத்துறை !

0
சர்ச்சை சாமியார் நித்யானந்தா குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படை யில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து


நித்யானந்தா ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்கி கைலாசா எனும் தனி நாடாக பிரகடனப் படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவ்வப்போது வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை கைது செய்வதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நித்யானந்தா வின் பாஸ்போர்ட்டை யும், புதிய பாஸ்போர்ட் வேண்டிய அவரது விண்ணப்பத்தை யும் ரத்து செய்துள்ளோம் என வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற் கிடையே, இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு வரும் 15 தேதி முதல் 17 தேதி வரை நடைபெற உள்ளது என ரவீஷ் குமார் செய்தியாளர் களிடையே கூறியது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)