உங்களுக்கு கீழ் பக்க முதுகு வலி இருக்கா... அப்ப இத படிங்க !

0
இளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருகிறார்கள். 
வலி நிவாரண சிகிச்சை
இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகு வலியை அதிகளவில் எதிர் கொள்கிறார்கள். இந்த கீழ் பக்க முதுகு வலிக்கு முழுமையான நிவாரண மளிக்கும் புதிய வலி நிவாரண சிகிச்சை அறிமுகமா யிருக்கிறது.

கீழ் பக்க முதுகு வலியை முதலில் நீங்கள் வராமல் தடுப்பதே சிறந்தது. அதற்கு முதலில் நீங்கள் அமர்ந்து பணியாற்றும் இருக்கை, உங்களுடைய உடல் வாகுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 

நீங்கள் பணியாற்றும் கணினி, உங்களுடைய கண் பார்வை யிலிருந்து மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளி யில் அமைந்திருக்க வேண்டும். 

இவை இரண்டும் இருந்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய இருக்கை யிலிருந்து எழுந்து, 60 முதல் 75 steps தளர் வாகவோ அல்லது இயல்பா கவோ நடந்து பிறகு மீண்டும் இருக்கையில் அமர்ந்து, பணியைத் தொடர வேண்டும்.
முதுகு வலிக்கு நிவாரணம்
இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய முதுகுத் தண்டில் பணிச்சுமை யின் காரணமாக ஏற்படும் அழுத்தம் தடுக்கப் படுகிறது. அத்துடன் முதுகு வலி ஏற்பட்டால், அதனை உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அது வலி நிவாரண சிகிச்சை யாக இருந்தாலும் அல்லது குணப்படுத்தக் கூடிய சிகிச்சையாக இருந்தாலும், சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். அதன் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையில் அதாவது எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை யில் 

உங்களுடைய முதுகுத் தண்டின் எத்தகைய திசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதை பொறுத்து, சிகிச்சையும், வலி நிவாரண சிகிச்சையும் அமையும். 

முதுகு வலி ஏற்பட்டு, உங்களுடைய இடது கால் அல்லது வலது காலின் மூட்டு களுக்கு கீழ் பகுதியில் வலி இருந்தாலோ அல்லது வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, 

உங்களது முதுகுவலி, கீழ் பக்க முதுகிற்கும் பரவியிரு க்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 
கீழ் முதுகு வலி
இதற்கு வலி நிவாரண மருத்துவர்கள், இயன்முறை மருத்துவ பயிற்சியும், அதற்குரிய மருந்து மாத்திரை களையும் வழங்கி இதனை குணப்படுத்துவர்.

முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகு வலிக்கு வலி நிவாரண சிகிச்சை வழங்கப் பட்டாலும், மீண்டும் முதுகு வலி வராதிருக்க, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடைமுறை யை மருத்துவர்கள் பரிந்துரைத்த வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

கீழ் பக்க முதுகு வலி ஐம்பது வயதைக் கடந்த முதியவர் களுக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களை பரிசோதனை செய்து, எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா...? 

என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்தே அவர்களுக் கான நிவாரண சிகிச்சை தொடர இயலும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)