தனியாக வசித்த ஆசிரியை - நகை, பணத்திற்காக கொடூரம் !

0
திருவண்ணா மலையில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளார்.
தனியாக வசித்த ஆசிரியை


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனியதாங்கல் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை லூர்துமேரி (69).

இவர் திருமணம் ஆகாமல், வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

லூர்துமேரி உறவினர்கள் வெளி நாட்டிலும், வெளி மாநிலத்திலும் வசித்து வருகின்றனர்.

யாருமின்றி தனியாக வசித்து வரும் லூர்துமேரியை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்குள் புகுந்தனர். 

நகை மற்றும் பணத்தை கொள்ளை யடித்த அவர்கள், லூர்துமேரியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது மட்டுமின்றி லூர்துமேரி ஆசையாக வளர்த்த நாயையும் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு சென்றுள்ளனர்.

இதை யடுத்து லூர்துமேரி இறந்து கிடப்பதைக் அறிந்தவர்கள் காவல்துறை யினருக்கு தகவல் கொடுத் துள்ளனர். 
நகை, பணத்திற்காக கொடூரம்


பின்னர் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. 

அத்துடன் மோப்பநாய் ‘மியா’ வரவழைக்கபட்டு ஆய்வு செய்யப் பட்டது.

அப்போது மோப்பநாய் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் சாலைகள் வரையில் சென்ற போதும், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இதனைத் தொடார்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பதிவாகி யிருந்த கைரேகை களை சேகரித்தனர். 

தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்த கொலை நகை, பணத்திற்காக நடந்திருக்க லாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)