திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சண்டை யிட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் அவர்களை பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு வரவழைத்து, ஆயிரத்து 330 திருக்குறளை யும் எழுத வேண்டும் என்ற தண்டனையை வழங்கினர்.
மாணவர்களும் காவல் நிலையம் முன்பு அமர்ந்த படி ஆயிரத்து 330 திருக்குறளை யும் புத்தகத்தை பார்த்து எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல் துறையின் இந்த தண்டனைக்கு பெற்றோர்கள் வரவேற்பை யும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
Thanks for Your Comments