துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப் பட்டுள்ள மாணவரை 3 நாள் காவலில் எடுக்க அனுமதி அளித்துள்ள கோர்ட், அவர் கழிவறையில் வழுக்கி விழாமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த வேங்கட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகேசை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவரது நண்பர் விஜய் கைது செய்யப் பட்டார்.
இதுதொடர்பான வழக்கில், விஜயை நவ.,14 வரை(3 நாள்) காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் விஜய் கழிவறையில் வழுக்கி விழாமல், பார்த்துக் கொள்ளும்படி, போலீசாருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
சமீப காலமாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் போது பலத்த காயங்களுடன் காணப்படுவர்.
இது போலீசாரின் தனி " கவனிப்பாக" இருக்கும். இதற்கு வழுக்கி விழுந்தத தாக காரணம் கூறப்படும். இந்நிலையில் கோர்ட் மறைமுகமாக சாடியுள்ளது.
Thanks for Your Comments