துப்புரவு பணிக்கு பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் குவிந்தனர் !

0
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங் களை நிரப்புவதற் காக விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டன. 
துப்புரவு பணிக்கு பி.இ., பி.டெக்., பட்டதாரிகள்

தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந் தால் மட்டுமே போதும். சம்பளம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

இதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் செய்தனர்.

சுமார் 7 ஆயிரம் பேர் மாநகராட்சி அலுவலகத் தில் நடைபெற்று வரும் நேர்காணல் முகாமிற்கு அழைக்கப் பட்டனர். 

அதில் முதல் நாளான நேற்று (27-ந்தேதி) சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.கோவை மாநகராட்சி யில் துப்புரவு பணிக்கான நேர்காணலு க்கு வந்தவர்கள்

இதில் 500 பேர் பட்டதாரிகள், இது தவிர பி.இ., பி.டெக்., படித்த வாலிபர்கள், ஏரோ நாட்டிக்கல் படித்த வாலிபர்களும் இதற்கு விண்ணப்பித் துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

குடும்பத்தோடு நேர்காணலு க்கு வந்த சிலரிடம் கேட்ட போது தங்களுக்கான பணி கிடைக்க வில்லை. இதனால் இந்த பணிக்கு விண்ணப் பித்துள்ளோம் என்றனர்.
வேலையில்லா பட்டதாரி

இந்நிலையில் மாநகராட்சி கமி‌ஷனரும், தனி அலுவலரு மான ஷ்வரன் குமார் ஜடாவத் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

கோவை மாநகராட்சி யில் துப்புரவு பணிக்காக விண்ணப்பித் தவர்களில் தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு மாநகராட்சி பிராதன அலுவலகத் தில் 27-ந்தேதி முதல் நாளை (29-ந்தேதி) வரை 3 நாட்கள் நடைபெறு கிறது.

27 மற்றும் 28-ந்தேதி களில் நேர் காணலுக்கு வர இயலாத வர்கள் நாளை (29-ந்தேதி) மதியம் 2 மணிக்கு

நடைபெற உள்ள நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)