அமெரிக்கா வில் தற்போது நிலவும் குளிர்காலம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இந்நிலையில் 38 பயணிகளுடன் க்ரீன்ஸ் போரோவி லிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, சிகாகோவின் சர்வதேச விமான நிலையத்தில் தரை யிறங்கும் போது
பனியால் விமானத்தின் ஓடு பாதையில் இருந்து சறுக்கி விலகியது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறினர்.
பின்பு விமானத்தின் இறக்கை தரையில் மோதியதை அடுத்து ஒருவழியாக விமானம் நின்றது.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட வில்லை.
இதை தொடர்ந்து கடும் பனிபொழிவு காரணமாக, சிகாகோவில் இருந்து புறப்பட இருந்த 1,200 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
Thanks for Your Comments