குழந்தையை தரையில் வீசி கொலை செய்த தந்தை !

0
ஆந்திராவில் மனைவி மீதான சந்தேகத்தால், தந்தையே 8 மாத ஆண் குழந்தையை தரையில் வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
குழந்தையை வீசி கொலை செய்த தந்தை


பிரகாசம் மாவட்டம் ராச்சர்லா கிராமத்தைச் சேர்ந்த சின்ன புள்ளையா வுக்கு, ரமாதேவி என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். 

திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட சின்னப் புள்ளையா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று தகராறு முற்றிய நிலையில், ஆத்திர மடைந்த சின்ன புள்ளையா மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியோடு, தனது 8 மாத ஆண் குழந்தையை தரையில் வீசி படுகொலை செய்தார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய சின்ன புள்ளையாவை தேடி வருகின்றனர்.

விசாரணையில் ஏற்கெனவே முதல் மனைவியை சந்தேகத்தின் பேரில் கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சின்ன புள்ளையா எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததும், 

இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தான் ரமாதேவியை திருமணம் செய்ததும் தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)