மத்திய பிரதேச மாநிலம், பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ளது பிரோடா கிராமம்.
இங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்வதற் காக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மணமகன் தனது குடும்பத்த னருடன் சென்றுள்ளார்.
அப்போது கோவிலில் உள்ளவர்கள், தலித் குடும்பத்தினரை கோவிலு க்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படு கிறது.
தாழ்த்தப் பட்டவர்கள் என்பதால் தங்களை கோவிலுக் குள் செல்ல அனுமதிக்க வில்லை என மணமகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படை யில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலித் குடும்பத்தினரை கோவிலுக்குள் அனுமதிக் காதது தொடர்பான புகாரை தீவிரமாக விசாரித்து வருவதாகவும்,
சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைக் கோட்ட அதிகாரி காசிராம் படோல் தெரிவித் துள்ளார்.
புகார் அளித்த தலித் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று லால்பாக் காவல் நிலைய அதிகாரி தெரிவித் துள்ளார்.
Thanks for Your Comments