தண்டுவட வாதமும் அதற்கான சிகிச்சை முறையும் !

0
நாம் வாழ்க்கை நடைமுறையை யும், உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றி யமைத்துக் கொண்டதால் ஆரோக்கிய சீர்கேடுகளும்., புதிய புதிய நோய்களும் உருவாகி யிருக்கின்றன.
தண்டுவட வாததிற்காக சிகிச்சை
வைத்திய துறை விஞ்ஞானிகளும் இதற்கான சிகிச்சைகளை கண்டறிந்து கொண்டே யிருக்கிறார்கள். இந்நிலையில் தண்டுவட வாதம் என்று புதிய நோ ய் தற்போது கண்டறியப் பட்டுள்ளது.

சிலருக்கு ஏற்படும் சாதாரண முதுகு வலி, அவரின் தண்டுவட த்தை தாக்கி, முடக்கி விடும் நோயாக மாறும் போது அதன் தண்டுவட வாத நோயாக மாறுகிறது.

இத்தகைய தண்டுவட வாதம், இருபது வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரை உள்ளவர் களுக்கு வரக் கூடிய ஒரு வகையின தான பாதிப்பு. 

இந்த பாதிப்பு ஏற்பட்டால் குத்தி லிருந்து இடுப்பு வரை உள்ள தண்டுவடப் பகுதி, அதன் இயல்பான நெகிழ்வுத் தன்மையை இழந்து, இறுகி விடும், அது தீவிர மடையும் பட்சத்தில் முடக்குவாதம் போன்று எழுந்து நடமாட நிலை ஏற்பட்டு விடும்.

தண்டுவட வாத நோயால் அதிகம் பாதிக்கப் படுவது ஆண்கள் தான். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது எதிர் வினையாற்றி நமது உறுப்புகளையே சில தருணங்களில் பாதிக்கும். 
தண்டுவட வாதம்
அந்த சமயத்தில் தண்டுவட வாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கறார்கள். ஆனால் இது குறித்த முறையான விழிப்புணர்வு மற்றும் புரிதல் மக்களிடையே ஏற்படவில்லை என்பது யதார்த்தமான உண்மை.

அத்துடன் தண்டுவட வாத நோய்க்கான சிகிச்சை களும் மருந்துகளும் விலை உயர்ந்தவை யாக இருக்கின்றன.

தெற்காசிய வில் ஆறு மில்லியன் மக்கள் தண்டுவட தண்டுவட வாதத்தால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் என்று அண்மைய ஆய்வு தெரிவிக்கின்றது. 

ஏனைய நோய்களைப் போல இதனை எளிதில் கண்டறிய இயலாது. சாதாரணமாக முதுகு வலியாகத் தான் அதன் அறிகுறிகள் இருக்கும்.

ஆனால் அதை கவனிக்காமல் விட்டால். நாளடைவில் தண்டுவட த்தை முடக்கி விடக்கூடிய அளவிற்கு தீவிர மடைந்து விடும். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். 

இதற்குரிய சிகிச்சைகள் தற்போது மேம்படுத்தப் பட்டுள்ளதால் தொடக்க நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் இதிலிருந்து விடுபடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)