BSNL நிறுவனத்தில் ஒரே வாரத்தில் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித் துள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங் களான BSNL மற்றும் MTNL-ஐ இணைக்க மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது.
கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் இந்த இரு நிறுவனங் களுக்கும் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்சுமை உள்ளது.
இதை யடுத்து, இந்த இரு நிறுவனங் களில் பணிபுரியும் 50 வயதை கடந்த ஊழியர் களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் 1.5 லட்சம் ஊழியர்களில் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு தகுதி யானவர்கள்.
94 ஆயிரத்திற்கு அதிகமான ஊழியர்கள் விருப்பம் தெரிவிப் பார்கள் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித் துள்ளனர்.
இத் திட்டத்தில் விண்ணப்பிக்க டிசம்பர் 3ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு என மத்திய அரசு 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி யுள்ளது.
இத்திட்டத்திற்கு என மத்திய அரசு 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி யுள்ளது.
விரைவில் இரு நிறுவனங் களும் இணைக்கப்பட்டு, அதன் சொத்துக் களை விற்பதன் மூலம் மூன்று ஆண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வி.ஆர்.எஸ் திட்டத்திற்கு விண்ணப் பிக்கும் ஊழியர் களுக்கு ஓய்வூதிய பலன்களுடன், இதுவரை பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 35 நாள் ஊதியமும், பணிக்காலம் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 25 நாள் ஊதியமும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை வெற்றிகர மாக செயல் படுத்தினால் ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments