சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வுக்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற் காக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு இந்த மேம்பாலத்தில் 3 கார்கள் மற்றும் 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன.
மேம் பாலத்துக்கு கீழே உள்ள சாலையிலும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
மேம் பாலத்துக்கு கீழே உள்ள சாலையிலும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது சற்றும் எதிர் பாராத வகையில் மேம்பாலம் திடீரென இடிந்து சாலையில் சென்ற 2 கார்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த ஒரு கார் மீது விழுந்தது.
அதே போல், மேம்பாலத்தில் சென்ற 3 கார்கள் மற்றும் 2 லாரிகளும் சாலையில் விழுந்தன. இந்த கோர விபத்தில் சாலையில் சென்ற 2 கார்களில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 2 பேர் படுகாயமடை ந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன், பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வற்றின் உதவியுடன் இடிபாடு களை அகற்றி வாகனங்களு க்குள் சிக்கி யிருந்தவர் களை மீட்டனர்.
சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், லாரி ஒன்று அனுமதிக்கப் பட்டதை விட அதிகளவில் சுமை ஏற்றி சென்றதால், மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவித் துள்ளனர். எனினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Thanks for Your Comments