இறந்தவர் உடலை பாதுகாக்க என்ன செய்வது?





இறந்தவர் உடலை பாதுகாக்க என்ன செய்வது?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
Post mortem வாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது. மரணம் ஏற்பட்டவுடன் இதயத் துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.
இறந்தவர் உடலை பாதுகாக்க


மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழிந்த பின்னர் தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பல சந்தர்ப் பங்களில் காலம் தாழ்ந்து விடுகிறது. 

இது போன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பைப் பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப் பெட்டி பயன்படுகிறது.

இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.

இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்க வேண்டி யிருந்தால் மருத்துவ மனையில் உள்ள Fixed Mortuary Boxல் வைத்து பாதுகாக்கலாம். 
Fixed Mortuary Box


0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக் கப்படும்.

இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச் செல்ல வேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.

Embalming வசதிகள் பெரிய மருத்துவ மனைகளிலும், பெரு நகரங்களிலும் கிடைக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)