கோயிலுக்கு திருட வந்த திருடன் - சிசிடிவி காட்சி !

0
சென்னை அருகே திருநீர் மலையில் கோயிலில் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்ட நபர் ஆலய நிர்வாகியின் செல்போனை திருடிச் செல்வது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது.
திருட வந்த திருடன்



திருநீர் மலையில் உள்ள ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்தார். 
கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த நபர் கோவிலுக்குள் சென்று அனைத்து சன்னதிகளில் உள்ள தெய்வங் களையும் வழிபட்டார். 

சுமார் ஒரு மணி நேரம் அவர் மனமுருக வழிபட்டதைக் கண்டவர்கள் அந்த நபர் பக்திமான் என எண்ணியிருப்பர். ஆனால் அவர் பக்கா திருடன் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. 

சாமி கும்பிட்ட கையோடு குடுகுடுவென படியேறி மேல் தளத்துக்குச் செல்லும் அந்த நபர், அலுவலக அறையில் இருந்த ஆலய நிர்வாகியின் செல்போனை திருடிக் கொண்டு தப்பி விட்டார். 
மேசையில் இருந்த செல்போன் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பக்தர் போல் வந்தவர் பண்ணிய வேலை எனத் தெரிய வந்தது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் செல்போன் திருடனை தேடி வருகின்றனர்.



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)