பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர் !

0
நெல்லை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துநரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர்



நெல்லையி லிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஆயுதப்படை காவலர்க ளான மகேஷ்வரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும் பணி காரணமாக கூடங்குளம் செல்வதற்கு பயணித்தனர். 

அப்போது பேருந்தின் நடத்துனர் ரமேஷ்நர் இருவரிடமும் வாரண்ட் கேட்டுள்ளார். அதற்கு வாரண்ட் இப்போது தான் எழுதிக் கொண்டிருக் கிறோம், முடிந்தவுடன் தருகிறோம் எனக் காவலர்கள்‌ கூறி யுள்ளனர்.
வாரண்ட் கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் நடத்துநரு க்கும், காவலர்களு க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திர மடைந்த ஒரு காவலர் நடத்துநரை தாக்கினார். 

இதில் நடத்துநருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வழிந்த நிலையில், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துநர் புகார் அளித்தார். 

அதனைத் தொடர்ந்து, காவலர்களான மகேஷ்வரன் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடத்துனர் ரமேஷ் மீது காவலர்களும் புகார் அளித்துள்ளனர்.



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)