அரசு ஊழியர்களுக்கு லீவு இல்லை - உ.பி !





அரசு ஊழியர்களுக்கு லீவு இல்லை - உ.பி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
வரும் நவம்பர் மாதம் 30 ம் தேதி வரையில் அரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை என உ.பி., அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது குறித்து உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: 
லீவு இல்லை


வரும் நாட்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு விசாரணை முடிந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதிக்குள் ஓய்வு பெறுகிறார். 

அதற்குள்ளாக அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனை யடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து துறை அரசு அதிகாரிகள் அனைவரும் வரும் நவம்பர் 30 ம் தேதி வரை விடுமுறை எடுக்க கூடாது.

அவர்கள் அனைவரும் மாவட்டங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், அவசர காலத்திற்கு மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் கூறி இருப்பதாக அரசின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

அயோத்தி தீர்ப்பு காரணத்தை கூறி மாவட்ட நீதிபதி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்அயோத்தி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)