விஷ சாப்பாட்டை கொடுத்த தந்தை - மகள் குழந்தையுடன் செய்த காரியம் !

0
சென்னையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்வதற்கு விஷம் கலந்து சாப்பாட்டை சாப்பிட்டுள்ளது அதிர்ச்சி யினை ஏற்படுத்தி யுள்ளது.
விஷ சாப்பாட்டை கொடுத்த தந்தை


சென்னை திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த சாமி (65), இவர் பில்டிங் கான்டிராக்ட ராக இருந்து வந்துள்ளார். 

இவரது மனைவி சுப்பம்மாள் (60), மகன்கள் நாகராஜ் (35), ரவி(30), மற்றும் ஜோதி, கல்யாணி என்ற இரண்டு மகள்கள் இருந்து வந்துள்ளனர்.

அனைவருக்கும் திருமணமான நிலையில், மகள்களின் திருமணத்திற்கு அதிகமாக கடன் வாங்கியதால் ஒட்டுமொத்த குடும்பமும் கடனில் தத்தளித் துள்ளது.

இதனால் வீட்டிற்கு வந்த இரண்டு மருமகள்களும் தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்கள். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த குடும்பத்தில் தலைவரான கோவிந்தசாமி அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார்.

ஆதலால் சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து தாய், தந்தை, இரண்டு மகன்கள், கல்யாணி மற்றும் அவரது 2 குழந்தைகள் என அனைவரும் சாப்பிட் டுள்ளனர். 

அப்போது கல்யாணியின் கணவர் திடீரென வீட்டிற்கு வர சம்பவத்தினை அவதானித்து அலறிப் போய் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மகள் குழந்தையுடன் செய்த காரியம்


கல்யாணியும் அவரது இரண்டு குழந்தைகள் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தருணத்தில் மருத்துவ மனையில் அனுமதித் துள்ளனர். மற்ற தாய், தந்தை, சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி யுள்ளனர்.

தற்போது கல்யாணி பொலிசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தனது தந்தை எனது திருமணத்திற்கு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கினார். ஆனால் அதனை திரும்ப செலுத்த முடிய வில்லை.

இதனால் மனமுடைந்து சாப்பாட்டில் விஷம் கலந்த எனது தந்தை, தற்கொலைக்கு யாருக்கும் சம்மதமோ அவர்கள் சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார். 

தந்தையின் பேச்சை மறுக்க முடியாத நான் எனது குழந்தைகள் இரண்டு பேருக்கும் ஊட்டி விட்டு நானும் அந்த சாப்பாட்டைச் சாப்பிட் டுள்ளேன் என்று கூறியுள்ளது சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)