குடி போதையில் நடை மேடையில் காரை ஏற்றி பரபரப்பு !

0
கர்நாடகத்தில் பெங்களூர் நகரில் எச் எஸ் ஆர் லேஅவுட் பகுதியில் நடை பாதையில் ஒரு சிறிய பெட்டிக் கடையில் சிலர், சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
நடை மேடையில் காரை ஏற்றி பரபரப்பு


இன்னும் சிலர் பேருந்துக் காக காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கார் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலை யோரத்தி லிருந்து நடைபாதை மீது ஏறியது. இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

பின்னர் நடைபாதையில் நின்றிருந் தவர்கள் மீது மோதிவிட்டு நின்றது. இதில் அந்த கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தோரும் நடந்து சென்றவ ர்களும் காய மடைந்தனர். 

அங்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணும் இதில் அடங்குவார். இந்த விபத்தில் 6 முதல் 7 பேர் வரை காய மடைந்தனர். அவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். 

காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததும் காரை வேகமாக இயக்கியதும் தெரிய வந்ததுள்ளது. அவரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)