கரியமில வாயுவை சேமிக்க முடியுமா?

0
ஆமாம்... காற்று மண்டலத்தில் வாயு உருவத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை சிறைப் பிடித்து ஓர் இடத்தில் அடைத்து விட்டால் புவியின் வெப்ப நிலையை குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கரியமில வாயு


நிலக்கரியும், கச்சா எண்ணையும் பூமியின் ஆழத்தில் இருக்கும் படுகையில் கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை இந்த எண்ணெய் படுகைக்குள் செலுத்தி சேமிப்பது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். 

எண்ணெய் படுகைக்குள் குழாய்கள் மூலம் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தும் போது, எண்ணெய்க் கிணற்றில் இருந்து வெளியேறும் எண்ணையின் அளவு அதிகரிப்ப தால் எண்ணையின் உற்பத்தி செலவு குறைகிறது. 

கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறை பிடிப்பதற் கான செலவு இதனால் ஈடு செய்யப் படுகிறது. கடலுக் கடியிலும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி சேமிக்க முடியுமாம். 

ஆனால் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும் போது அடர்த்தி மிகுதியால் கடலுக் கடியில் கார்பன் டை ஆக்சைடு ஏரியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. 
கார்பன் டை ஆக்சைடு


கடல் நீரின் அமிலத் தன்மை மிகுந்து கடல் உயிரினங்கள் அழிந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவதாக, சில தாது உப்புக்க ளுடன் கார்பன் டை ஆக்சைடை வினைபுரியச் செய்து உலோக ஆக்சைடு களாக மாற்றியும் சேமிக்கலாம் என்கிறார்கள். 

ஆனால் இந்த வினை மெதுவாக நடைபெறக்கூடியது. வினையை விரைவு படுத்த வேண்டு மென்றால் கூடுதலாக செலவு செய்ய வேண்டி யிருக்கும். இதன் விளைவாக கச்சா எண்ணையின் விலை 180 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பூமி வெப்பமடைவதை தடுக்க வேண்டு மென்றால் எந்த விலையும் கொடுக்கத் தானே வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)