விதவை பெண்ணை கற்பழித்து பாலியல் தொல்லை தந்த பள்ளி ஆசிரியர் !

0
பெங்களூரு கம்மன ஹள்ளியில் வசித்து வருபவர் அருண் (வயது 35). தனியார் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அருணின் பள்ளி பருவத்தில் அனுசா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்பவர் அவருடன் படித்து வந்தார். 
பாலியல்




இந்த நிலையில் தனியார் மருத்துவ மனையில் வைத்து அங்கு துப்புரவு தொழிலாளர்கள் பிரிவில் மேற்பார்வை யாளராக பணி செய்து வரும் அனுசாவை, அருண் சந்தித்தார். 2 பேரும் பேசி கொண்டனர்.

இந்த வேளையில் தன்னை மனைவி விவாகரத்து செய்து சென்றதாக அருண் கூறியுள்ளார். அதே நேரத்தில் தனது கணவர் உடல் நலக்குறைவால் 2 ஆண்டு களுக்கு முன்பு இறந்தார். 
இதனால் 2 குழந்தை களுடன் வாழ்ந்து வருவதாக அனுசா அவரிடம் கூறியுள்ளார். இதை யடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2 பேருக்கும் இடையே திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது. இதை யடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி அனுசாவை, அருண் தனது வீட்டுக்கு அழைத்தார். 

அங்கு சென்ற அனுசாவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அருண் கற்பழித்துள்ள தாக கூறப்படுகிறது.

இது பற்றி அனுசா கேட்டதற்கு அவரை திருமணம் செய்து கொள்வதாக அருண் கூறியுள்ளார். இருப்பினும் அருண் அவரை திருமணம் செய்து கொள்ள வில்லை. 
உல்லாசம்




மேலும் அடிக்கடி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்கு ம்படி அருண், அனுசாவை வலியுறுத்தி யுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கும் போது அவர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

அத்துடன் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை குடும்பத்தி னருக்கு காண்பிப்பதாக மிரட்டி அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப் படுகிறது. 
அத்துடன் அனுசாவின் தங்க நகைகளை எடுத்து கொண்ட அருண், அவருடைய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 லட்சம் வரை எடுத்து வைத்து கொண்டதாக கூறப்படு கிறது.

இது போன்ற தொடர் தொல்லையால் பாதிக்கப்பட்ட அனுசா, சம்பவம் குறித்து குமாரசாமி லே-அவுட் போலீசில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)