காசுக்காக பள்ளி ஊட்டச்சத்தை விற்கும் அவலம் !





காசுக்காக பள்ளி ஊட்டச்சத்தை விற்கும் அவலம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
உத்தர பிரதேசம் ரேபரேலி மாவட்டம் சலோன் தொகுதியில் உள்ள ஒரு விலங்குத் தீவன குடோனில் பள்ளிக் குழந்தை களுக்கான மதிய ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் அதிகாரிக ளால் கைப்பற்றப் பட்டது. 
பள்ளி ஊட்டச்சத்து




அதிகாரிகள் சோதனையிட்ட குடோனில் 155 சாக்கு மூட்டைகள் பதுக்கப்பட்டு இருந்தது. கைப்பற்றப்பட்ட மொத்த உணவுகள் அடங்கிய சாக்கு மூட்டைகளின் எடை 9,300 கிலோ என்று கண்டறியப் பட்டது. 
இதனை அடுத்து, உத்தரபிரதேச அரசு ரேபரேலி மற்றும் கன்னோஜ் ஆகிய மாவட்டங்களில் நடந்த மதிய ஊட்டச்சத்து உணவு முறைகேடுக் காக 28 சத்துணவு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை யாக 17 அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இது தவிர, மேலும் நான்கு மேற்பார்வை யாளர்கள் மற்றும் தலைமை ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 




குடோன் ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு உள்ளனர். முதற்கட்ட விசாரணையின் போது, அங்கன்வாடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு சட்ட விரோதமாக ஊட்டச்சத்து உணவுகள் விற்கப் பட்டது அம்பலமானது.
மாவட்டத்தின் டி.பி.ஓ. அதிகாரியான பவன் யாதவ் மீது பணியில் அலட்சியம் காட்டியதற் காக குற்றப் பத்திரிகை பிறப்பிக் கப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)