நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமம் - கலெக்டர் அறிவிப்பு !

0
தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு அம்மா திட்ட முகாமை நடத்தி வருகிறது. 
கலெக்டர் அறிவிப்பு




இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா திம்மராஜ புரத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி 2 கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா மானாடு தண்டுபத்து கிராமத்திலும், 
சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம் - செட்டியிருப்பு கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா பிச்சைத் தலைவன் பட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா கே. தங்கம்மாள் புரத்திலும், எட்டயபுரம் தாலுகா வேலிடு பட்டியிலும், 

ஓட்டப்பிடாரம் தாலுகா சந்திரகிரி யிலும், கயத்தார் தாலுகா நாகம் பட்டியிலும், ஏரல் தாலுகா இருவப்பபுரம்-1 கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.




இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்று மற்றும் வருவாய் துறையி னரால் நிறை வேற்றப்பட வேண்டிய கோரிக்கை குறித்து மனு கொடுக்கலாம். 

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)