கார் முதலுதவி பெட்டியில் கண்டிப்பாக ஆணுறை !

0
புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலானது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத அடிப்படையில் பல மாநிலங்கள் அப்படியே அபராதத்தை அமல்படுத்தி யுள்ளன.
கார்களில் கண்டிப்பாக ஆணுறை




இதனால் பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளை போலீசார் கடும் சிரமத்துக் குள்ளாக்கின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி சரியாக வாகனங் களை ஓட்டி வந்தாலும், ஆணுறை இல்லாத பட்சத்தில் அபராதம் வசூலிக்கப் படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கார் டயர் குறியீடுகள் விவரம் !
புகை பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்
பற்களில் இருந்து துர்நாற்றம் வருவது ஏன்?
இந்த அபராதம் குறிப்பாக ஓலா மற்றும் உபர் ஓட்டுநர் களிடம் வசூலிக்கப் படுவதாகவும், போக்குவரத்து தலைமை யிலிருந்து அதிகாரப் பூர்வமாக இந்த விதியை அறிவிக்கப் படாத நிலையில், 

போலீசார் அபராதம் வசூலிப்பது நியாயமற்றது என கார் ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கார் ஓட்டுநர்கள் கூறுகையில், மழை நேரங்களில் ஷூக்களை பாதுகாப்பாக வைக்க ஆணுறை பயன்படுகிறது. 

ஏதேனும் காயம் ஏற்பட்டால் ரத்தக் கசிவை நிறுத்தவும் பயன்படுகிறது. ஆனால் ஆணுறையின் பயன்பாடுகள் குறித்து போக்குவரத்து காவலர் களுக்கு தெரியவில்லை.

அவர்களிடம் கேட்டால் பதில் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அபராதம் மட்டும் வசூலிக்கிறார்கள் என கார் ஓட்டுனர்கள் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர்.

எதற்காக ஆணுறையை முதலுதவி பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றால், விபத்துகள் ஏற்படும் பொழுது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது 
ஆணுறை




அடிபட்ட இடத்தி லிருந்து ரத்தம் வெளியேறி னாலோ அந்த இடத்தில் ஆணுறையைக் கொண்டு இறுக்கிக் கட்டினால் ரத்தம் விரயம் ஆவதை தடுக்க முடியும்.

இதனால் விபத்தில் சிக்கியவரை மருத்துவ மனையில் சேர்க்கப்படும் பொழுது அவரை எளிதில் காப்பாற்றிவிட முடியும். 

இதற்காக தான் கார் ஓட்டுநர்கள் முதலுதவி பெட்டிற்குள் இரண்டு மூன்று ஆணுறை களை வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப் படுகிறார்கள்.
இந்த நுட்பம் சில ஓட்டுநர் களுக்குத் தெரிந்துள்ளதால் ஆணுறையுடன் பயணம் செய்கிறார்கள். தெரியாத வர்கள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டு அபராதம் கட்டும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

இது குறித்து டெல்லி போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆணுறை குறித்து எந்த அபராதமும் வசூலிக்கப்பட நிர்பந்திக்க வில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)