10 வயதில் 18 மாதங்கள் அனுபவித்த கொடுமை - பிறகு நடந்த சம்பவம் !

0
10 வயதில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரை 11 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
10 வயதில் 18 மாதங்கள் அனுபவித்த கொடுமை




பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் பிரையன் டிக். இவருடைய வயது 49 இவர் முன்னாள் ராணுவ வீரராவார். 10 ஆண்டு களுக்கு முன்னர் இவருடைய பக்கத்து வீட்டில் லாரா குக் என்ற 10 வயது சிறுமி வசித்து வந்தார். 
அப்போது சுமார் 18 மாத காலத்திற்கு அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இது குறித்து லாரா 2 வருடங்கள் கழித்து தன் பாட்டியிடம் கூறினார். 

உடனடியாக அவர்கள் காவல் துறையில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பிரையன் டிக்கை கைது செய்து நீதி மன்றத்தில் அவருக்கு 9 ஆண்டுகால சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

சிறை வாசத்திற்கு பிறகு அந்த பெண்ணை எங்கேயாவது கண்டால் பிரையன் அவ்விடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது.




தற்போது லாராவுக்கு 21 வயதாகி யுள்ளது. சமீபத்தில் லாரா ஒரு மருத்துவ மனைக்கு சென்ற போது அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் கத்தி கூச்சலிட தொடங்கினார். 
உடனடியாக விரைந்து வந்தார் மருத்துவமனை மேலாளர்கள் பிரையனை மருத்துவ மனையில் இருந்து வெளியேற்றினர். அதன் பிறகு நிகழ்ந்த சம்பவத்திற் காக லாராவிடம் மன்னிப்பு கேட்டனர்.

இந்த சம்பவமானது அந்த மருத்துவ மனையில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)