குழந்தைக்கு போட்ட ஊசி உடலிலேயே சிக்கியிருந்த கொடுமை !





குழந்தைக்கு போட்ட ஊசி உடலிலேயே சிக்கியிருந்த கொடுமை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் - மலர்விழி தம்பதிக்கு கடந்த 20-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
குழந்தைக்கு போட்ட ஊசி




தாயும், சேயும் நலமுடன் இருந்த நிலையில், அடுத்த நாளில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அன்று முதலே குழந்தை அழுது கொண்டு இருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மலர் விழியும், குழந்தையும் வீடு திரும்பி யுள்ளனர்.

அதன் பிறகு குழந்தையை குளிக்க வைத்த போது தொடையில் ஊசி சிக்கி யிருப்பது தெரிய வந்தது. 




அதனைக் கண்டு அதிர்ச்சி யடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று ஊசியை அகற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். 
இதனிடையே, இதற்கு காரணமான அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)