ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

0
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. 
ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

உலகில் இன்று பயன் படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமை யாத பொருளாக மாறி விட்டது. 


ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறை யாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக் குரிய உண்மை ஆகும்.

நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ள தாக இருக்கின்றது. இது இங்குலிகத் தாதுவில் இருந்து பிரித்தெடுக் கப்பட்டு தூய்மையாக்கப் படுகிறது. 
இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகிய வற்றால் நீர்மமாக நிரப்பப் படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகிய வற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப் படுகிறது.

பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. 


மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன. பாதரசம் புற ஊதாக் கதிரின் மூலமாக செயல் படுகின்றது. 

பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படுகின்றது. 

மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன் படுகின்றது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. 

எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படை கின்றது. 

மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறை க்கும் தொடர்கின்றன.
ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக் கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.


தொழில் நுட்பம் வளர்ந்து உச்சாணிக் கொம்பில் இருக்கும் இக்காலத்தில், குழந்தை வளர்ப்பு தான் பெற்றோர் களுக்கான சவாலான விஷயமே. 

எங்கும் போட்டி நிரம்பிய உலகம் என்பதால் குழந்தைகளும் மன அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்கள். 

தன்முனைப் புள்ள குழந்தைகளின் உலகம் வேறானது. அவர்கள் ஒருவாறு தம்மை சமூகத்திற்கு ஏற்றவாறு தயார் படுத்திக் கொள்கிறார்கள். 

என்றாலும் சிறப்புக் குழந்தைகளின் நிலை அப்படி யில்லை. அவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப் படுகிறது.
இந்தியாவில் மட்டும் 88 குழந்தை களுக்கு 1 குழந்தை “ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD)” என்ற குறைபாட்டுடன் வளர்வதாக அதிகாரப் பூர்வமான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

தேசம் முழுவதும் ஏறக்குறைய இருபது லட்சம் குழந்தைகள் ஆட்டிஸத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவல். 

இந்த நிலையில் “சிறப்புக் குழந்தைகள்” பற்றிய போதுமான புரிதல் நம் சமூகத்திற்கு இருக்கிறதா?” என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. 

நகரங்களைக் காட்டிலும், கிராமங்களில் இந்த நிலையானது மோசத்திலும் மோசம். பரிதாபத்திலும் பரிதாபம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு மேகனா குல்சார் இயக்கி, The Special Child Trust மூலம் வெளிவந்த “க்ளோசர்- Closer” என்ற ஆவணப்படம் பார்க்கக் கிடைத்தது. 
ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

டெல்லி மற்றும் குர்காவ்னைச் சுற்றியுள்ள வசதியும் கல்வித் திறனும் மிக்க குடும்பங் களிலுள்ள சிறப்புக் குழந்தைகளின் பராமரிப்பு சார்ந்த காட்சிப் பதிவு. 


மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பயிற்சிக் கூடங்கள், சிறப்புக் குழந்தை மருத்துவர்கள், பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பயிற்சி யாளர்களின் பகிர்தல்கள் மூலம் ஆல்பம் போல நகரும் 36 நிமிட ஆவணப்படம். 

குறைபாட்டிலிருந்து முழுமையாகக் குணப்படுத்த இயலாது எனினும் குழந்தைகள் தன்னிச்சை யாக வாழும் பயிற்சியை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கி றார்கள். 
ஓவியம், கலை என்று அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகி றார்கள். இந்தப் புரிதல்தான் கிராமங்களில் உள்ள இத்தகைய சிறார்கள் குறித்துச் சிறிதும் இல்லாமல் போகிறது என்பது வேதனையான யதார்த்தம்.

சிறப்புக் குழந்தைகள் என்று வகைப் படுத்தப்படும் மன வளர்ச்சிக் குன்றிய பிள்ளைகள் அனைவரையும் ஒரே பட்டியலில் சேர்க்க இயலாது என்பது தான் நிதர்சனம். 

அவர்களின் புரிதல் தன்மை மற்றும் தன் முனைப்பின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு இருப்பார்கள். 

சுய உணர்ச்சி இல்லாமல் அசையும் திறன் மட்டுமே கொண்டவர்கள் முதல், வெகுளியான முகத்துடன் இனம் காண முடியாத குழந்தைத் தனத்துடன் இருப்பவர்கள் வரை பல நிலைகளில் இவர்களை வகைப் படுத்தலாம்.

தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சி யாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். 
ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனை களுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன் வைக்கிறார்கள்.


அந்த ஜப்பானியக் கப்பலில் வளர்க்க ப்படும் பூனைகளுக்கு மீன்கள் தான் பிரதான உணவு. கடலில் பிடிக்கப்படும் உயிருள்ள மீன்களை துள்ளத் துடிக்கச் சாப்பிட்டு வளர்ந்த திமிர் பிடித்த பூனைகள் அவை. 

சில ஆண்டுகள் கழித்து அந்தக் கப்பலில் ஒரு வினோதம் நடக்கிறது. வளர்க்கப்படும் பூனைகள் இங்குமங்கும் ஓடி, மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கின்றன. 
அதே மீன்களைச் கொத்தித் தின்னும் சமுத்திரத்தின் மேல் வட்டமடிக்கும் கடற் பறவைகளும் அதைப் போலவே விநோதமாக இறந்துள்ளன. ஆரம்பத்தில் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. 

பின்னர் காரணம் புரியாமல் குழம்பியிருக் கிறார்கள். உட்கொள்ளும் உணவுகளின் மூலம், பாதரசத்தின் அடர்த்தி உயிரினங்களில் அதிகமாகும் பொழுது, அது மத்திய நரம்பு மண்டலங்களை பாதிக்கும் என்பதை ஆராய்ச்சிகள் நிரூபணம் செய்கின்றது. 

மேலும் வளரும் கருவின் மூளைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள். 

அது மட்டு மல்லாமல் மெல்லிய மூளை அதிர்வு, மனச்சிதைவு, நடுக்கம், உணர்வுத் தடுமாற்றம், குரோமோ சோம்களின் பிறழ்வு ஆகிய வற்றிற்கும் இது காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார்கள். 
ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

கால இடைவெளி யில் சேகரமான 0.9 கிராம் பாதரசம் 10 ஹெக்டேர் பரப்புள்ள ஏரியை நச்சுப்படுத்தப் போதுமானது என்று இன்றைய நிலையில் ஆராட்சி யாளர்கள் கூறுகிறார்கள். 


ஆகவே தொடர்ந்து பல ஆண்டுக ளாகக் கொட்டப்பட்ட கழிவுகளால் மினமத்தா கடற்பகுதி மீன்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன.

பாதரசத்தின் விஷத் தன்மை அதன் மூலக்கூறு வடிவத்தைப் பொறுத்து வீர்யம் மாறுகிறது. பாதரச ஆவி மற்றும் மீதைல் பாதரசம் ஆகியவை தான் வழக்கமான இதன் வடிவங்களாகும். 
நேரடியாகவோ அல்லது காற்றி லிருந்து படிவதன் மூலமாகவோ பாதரசம் நீர்ம நிலையை அடையும் போது, வேதிச் செயல்பாடு காரணமாக அது மீதைல் பாதரசமாக மாறுகிறது. 

இது பாதரசத்தின் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த வடிவமாகும். எனவே பாதிப்பிற் குள்ளான மீன்களை சாப்பிட்ட பூனைகளும், பறவைகளும் நரம்பியல் சிதைவுக்கு உள்ளாகி, அதன் அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளன. 
அதே மீன்களை மனிதர்களும் சாப்பிட அவர்களுக்கும் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. 

ஏறக்குறைய 3000 நபர்கள் மினமத்தா நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும், 1974-ஆம் ஆண்டுவரை 798 நபர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அறிந்து கொள்ளுங்கள்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)