குடியாத்தம் வாக்கு சாவடியில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு !

0
குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 11 கம்யூட்டர்கள் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப் பட்டுள்ளது.
குடியாத்தம் வாக்கு சாவடி



வேலூர் பாராளுமன்ற தேர்தலை யொட்டி இப்பள்ளியில் 29, 30,32 வார்டுகளுக் கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப் பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம கும்பல் ஸ்மார்ட் வகுப்பில் இருந்த 11 கம்யூட்டர்கள், பிரிண்டர், போன் மற்றும் தேர்தல் பாதுகாப்பிற் காக பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பி சென்று விட்டனர்.

இன்று காலை தேர்தல் பணிக்காக பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் பள்ளியின் 5 வகுப்பு அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கம்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பிற் காக பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். 
இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)