பேஸ்புக் நண்பரால் வாலிபர் தற்கொலை - புதுவை ஆஸ்பத்திரியில் பரபரப்பு !

0
புதுவை அரும்பார்த்த புரத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரும் கடலூரை சேர்ந்த சந்துரு என்ற வாலிபரும் பேஸ்புக் மூலம் நண்பர்க ளாயினர். 
பேஸ்புக் நண்பரால் வாலிபர் தற்கொலை



இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசவில்லை. பலமுறை வினோத் செல்போனில் தொடர்பு கொண்டும் சந்துரு பேசவில்லை. 

இதனால் விரக்தி அடைந்த வினோத் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே வினோத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக் காக புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். 
அங்கு வினோத் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதனை அறிந்த சந்துரு நேற்று மதியம் வினோத்தை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் வினோத்திடம் பேசாமல் சந்துரு சென்று விட்டார்.

இதனால் சோகம் அடைந்த வினோத் ஆஸ்பத்திரி யின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை. எனவே கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக உரத்த குரலில் கத்தினார். 

இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்புக் குள்ளானது. உடனடியாக போலீசாரு க்கும், தீயணைப்பு படையினரு க்கும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 

போலீசார், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வினோத்திடம் சமாதானம் பேசி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர். 



ஆனால் அதனை வினோத் ஏற்க மறுத்து நண்பன் என்னிடம் செல்போனில் பேசினால் மட்டுமே கீழே இறங்குவேன் என்று அடம் பிடித்தார். ஒரு வழியாக போலீசார் சந்துருவின் செல்போனில் தொடர்பு கொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு வர வழைத்தனர். 

பின்னர் வினோத் முன்பு சந்துருவை நிறுத்தி கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு வினோத் என்னிடம் எப்போதும் போல் செல்போனில் பேசுவேன் என்று சந்துரு சத்தியம் செய்து கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என்று மீண்டும் அடம் பிடித்தார்.
இதை யடுத்து சந்துரு சத்தியம் செய்து கொடுத்ததால் அதன் பிறகு வினோத் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மீண்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் சந்துருவிடம் கேட்டதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஆள் எடுப்பு வேலைக்காக சென்னை சென்று இருந்த தால் வினோத்திடம் போனில் பேச முடியவில்லை என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)