பொறியாளர் மீது சேற்றை ஊற்றி அவமானப்படுத்திய எம்.எல்.ஏ !

0
மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே, அரசுப் பொறியாளர் மீது பொது இடத்தில் வைத்து சேற்றைக் ஊற்றி அவமானப் படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திரனாத் பட்னவிஸ் தலைமை யிலான பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பொறியாளர் மீது சேற்றை ஊற்றி அவமானப்படுத்திய எம்.எல்.ஏ



இந்தநிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கன்காவலி பகுதியில், மும்பை-கோவா நெடுஞ் சாலையில், கட்டப்படும் பாலத்தின் பணியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே ஆய்வு செய்தார். மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் நாராயன் ரானேவின் மகன் தான் நிதேஷ் ரானே. 
அப்போது, பாலத்தின் கட்டுமானம் தரமில்லாத தாக இருந்துள்ளது. எனவே, பாலத்தைக் கட்டும் பொறுப்பில் உள்ள அரசுப் பொறியாளர் பிரகாஷ் ஷேடேகரின் மீது நிதேஷ் ரானேவும் அவரது ஆதரவாளர் களும் சேற்றை அள்ளி ஊற்றினர். பொது மக்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளது.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, மாநகராட்சி அதிகாரியை பேட்டால் அடித்தார். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அதே போன்ற தொரு சம்பவம் நடை பெற்றுள்ளது.



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)