நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை - மனைவியிடம் விசாரணை

0
நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



இதில் காயத்ரி கோபித்துக் கொண்டு தனது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நாகராஜ் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜூம் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரனும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் மகேந்திரன் அடிக்கடி நாகராஜ் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது நாகராஜ் மனைவியுடன் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை நாகராஜ் கண்டித்து வந்தார்.



எனவே இந்த தகராறில் நாகராஜ் அடித்து கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக நாகராஜின் மனைவி காயத்ரி, மகேந்திரனின் மனைவி பானு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மகேந்திரன் தலை மறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)