அருப்பு கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி !

0
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார் அந்த பெண் முன்பு நின்றது. 
அருப்புக்கோட்டை அருகே பேராசிரியையை கடத்த முயற்சி




காரில் இருந்து இறங்கிய வாலிபர் திடீரென்று பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றார். இதை பார்த்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு இளம் பெண்ணை மீட்டு, வாலிபரையும் மடக்கிப் பிடித்தனர். 
இது குறித்து அருப்புக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீசார் அங்கு வந்து இளம் பெண்ணையும், வாலிபரையும் காவல் நிலையத்து க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள கோரப் பள்ளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பதும் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. 

இதை யடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் காவல் நிலையத்து க்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)