பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை !

0
கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற் குட்பட்ட வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த ஒருவர் இன்று பிற்பகல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை



அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த ஒருவர் பெண் காவலர் மீது திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் உடல் கருகிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்று குழந்தைகளின் தாயான அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக தெரிய வந்துள்ள நிலையில், அவரை விரட்டி வந்து தீயிட்டு கொளுத்திய நபரும் கடுமையான தீக்காயங்க ளால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)