நடந்தது எங்க குடும்ப பர்சனல்... சர்ச்சை குறித்து தமிழிசை !

0
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தி யாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அவருடன் பா.ஜ.க கட்சித் தொண்டர்கள் பலரும் குழுமியிருந்தனர். 
நடந்தது எங்க குடும்ப பர்சனல்... சர்ச்சை குறித்து தமிழிசை !
அப்போது, தமிழிசையின் மகனும் டாக்டருமான சுகநாதன் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷ மிட்டதாகவும் அவரை பா.ஜ.க தொண்டர்கள் அப்புறப் படுத்தியதாக வும் தகவல் பரவியது. 

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. `நேற்று என்ன நடந்தது?' எனத் தெரிந்து கொள்ள தமிழிசை யிடம் பேசினோம். 

கட்சிப் பணி வேறு; குடும்ப பர்சனல் விஷயம் வேறு. என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளாமல், நேற்று நடந்த நிகழ்வைச் சிலர் பெரிது படுத்துகின்றனர் என்ற தமிழிசை, நடந்த நிகழ்வினை விவரித்தார். 
ஒரு குடும்ப நிகழ்வுக்காக நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் கலந்து கொள்ள கிளம்பினோம். 
சென்னை வந்திருந்த உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தகவல் தான் எங்களுக்கு முன் கூட்டியே கிடைத்தது. 

அவரின் சென்னைப் பயணத்தில் திடீரென மாறுதல் ஏற்பட்டது. 

அவர் எங்கள் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து, தொண்டர்களைச் சந்திப்பதாகத் திடீரென திட்டமிடப் பட்டது. அந்தத் தகவல் எனக்குக் கிடைத்ததும், நீங்கள் முன்னால் செல்லுங்கள். 

துணை முதல்வர் கலந்து கொள்ளும் கட்சிப் பணியை முடித்து விட்டு அடுத்த விமானத்தில் நான் வருகிறேன் என என் கணவர் மற்றும் மகனிடம் சொன்னேன். 
இந்த நிகழ்வெல்லாம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. நாங்கள் மூவரும் பயணிக் கவிருந்த விமானம் புறப்படத் தயாரானது. 

போர்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. உன் கட்சிப் பணி தான் முக்கியமா... குடும்ப நிகழ்வுக்காக எங்களுடன் வரமாட்டியா... 
உனக்குக் குடும்பம் முக்கிய மில்லையா... என என் மகன் சுகநாதன் அழைத்துக் கொண்டே இருந்தான். பெரிதாக அவன் கோஷமெல்லாம் போடவில்லை. 

அது குடும்ப ரீதியான, பர்சனலான விஷயம். இந்த எமோஷனல் எல்லோரு க்குமே இருப்பது இயல்பு தானே! 
இப்படி எல்லோரின் தனிப்பட்ட வாழ்க்கையி லும் சில நிகழ்வுகள் நடக்கும். இதை அரசியலாக்குவது நியாயமில்லை என விளக்க மளித்தார் தமிழிசை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)