காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் வீரமரணம் !

0
ஜம்மு-காஷ்மீர் அருகே அனந்தநாக்கில் பயங்கரவாதி களுடன் ஆன துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரண மடைந்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் என்ற பகுதியின் பிதூரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
காஷ்மீர் துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் வீரமரணம்



இதை யடுத்து அந்த பகுதியை 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், ஜம்மு-காஷ்மீர் போலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் சுற்றி வளைத்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளை தப்ப விடாமல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப் பட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களின் ஆயுதங் களையும் பறிமுதல் செய்தனர். 



கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 அல்லது 4 தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சண்டையின் போது படுகாயமடைந்த தால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ மேஜர் சிகிச்சை பலனின்றி வீரமரண மடைந்துள்ளார். 
மேலும், ஒரு ராணுவ மேஜர் மற்றும் 2 வீரர்கள் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்று வரும் பகுதியில் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)