EPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது?





EPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களு க்கும், EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPF (Employees' Provident Fund Organisation) பணத்தை
EPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது?
இப்போது ஆன் லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஒரு ஊழியர் பி.எஃப் பணத்தை எடுக்க வேண்டு மெனில், வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியமாக இருந்தது. 

பி.எஃப் பணத்தை எடுக்கும் போது படிவம் எண் 19, 10சி ஆகிய வற்றைப் பூர்த்தி செய்து வேலை செய்யும் நிறுவனத்திடம் தர வேண்டும். 

அதன் பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின் அந்தப் படிவம் பி.எஃப் அலுவலகத்து க்கு அனுப்பப்படும்.
ஊழியர், பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைக்க வேண்டும். 

இறுதியாக பி.எஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தான் இது வரை இருந்த நடைமுறை.

இந்நிலையில் பணிபுரியும் நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் வேலை யிலிருந்து விலகியவர் களுக்கு, பி.எஃப் பணத்தை எடுப்பதில் பிரச்சனை இருந்தது. 
EPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது?
ஆனால் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எளிதாக ஆன் லைனில் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

10 வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். 

இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 

10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும் போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி வட்டி இல்லாமல் கிடைக்கும்.
ஆனால் 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. 

பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். 

பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்து விட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும். 
EPF பணம் உடனே கிடைக்க செய்ய வேண்டியது?
பிஎஃப் தொகையை குறைந்த பட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருந் தால் இடையில் எடுக்கலாம். 

அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்ற வற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். 

எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை இந்த www.epfindia.com/ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)