உ.பி.யில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி !

0
உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் - ஆக்ரா தேசிய நெடுஞ் சாலையில் நேற்று இரவு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் லெஹ்ரவன் கிராமத்தின் அருகே சென்ற போது, அந்த வாகனமும், அதே சாலையில் வந்த சரக்கு வாகனமும் மோதி விபத்துக் குள்ளாகின.
உ.பி.யில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி



இதில், பயணிகள் வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. அந்த வாகனத்தில் இருந்த 8 பேர் பலியாகினர். 11 பேர் காய மடைந்தனர். காய மடைந்தவர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி யுள்ளனர்.

சாலை விபத்தில் 8 பேர் உயிரி ழப்புக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந் தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரி களுக்கு உத்தர விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)