ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை - ரிசர்வ் வங்கி !

0
ஆஸ்திரேலியா வில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த டாலர் நோட்டில் கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்ற த்தில் அவர் ஆற்றிய முதல் உரையின் வரிகள் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. 
ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை


அதில் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பான்ஸிபில்டி’ என்று அச்சிடப் பட்டுள்ளது. தற்போது சுமார் 46 கோடி, 50 டாலர் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளன. நோட்டு அச்சிடப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அதில் உள்ள பிழை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

50 டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதே சமயம் புழக்கத்தில் இருக்கும் 50 டாலர் நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும், வரும் காலங்களில் அச்சிடப்படும் டாலர் நோட்டுகளில், இந்த பிழை சரி செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)