உடல் வலிமைக்காக அணில் உண்ட தம்பதி பலி !





உடல் வலிமைக்காக அணில் உண்ட தம்பதி பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறை களை கையாள்வது வழக்கம். 
உடல் வலிமைக்காக அணில் உண்ட தம்பதி
உடல் நலனில் ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த வழிமுறை களை கடைப் பிடிப்பதும் கடினம் என்பதையும் மறுக்க முடியாது. 
நம்முடன் பணி புரிபவர்கள், நமக்கு தெரிந்தவர்கள் உடல் நலனுக்கான மருத்துவம் சொல்லும் போது அதனை ஆர்வத்துடன் கேட்டறிந்து அதன்படி செய்ய முற்படுவோம். 

அதே போல் மங்கோலியா வைச் சேர்ந்த தம்பதி உடல் நலனுக்காக ஒரு உணவை எடுத்துக் கொள்ளவே அது விபரீதத்தில் சென்று முடிந்தது. 

மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். 

மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. 
இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகிய வற்றை உண்டனர். 

இதை யடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

மருத்துவ மனைக்கு செல்லும் போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனை யில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். 

கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். 
இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)