தந்தை கொலைக்கு மகனின் வாக்குமூலம் கைதான தாயின் கள்ளக்காதலன் !





தந்தை கொலைக்கு மகனின் வாக்குமூலம் கைதான தாயின் கள்ளக்காதலன் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவி யிடையே தகராறு ஏற்பட்டது. 
தந்தை கொலைக்கு மகனின் வாக்குமூலம் கைதான தாயின் கள்ளக்காதலன்


அவர்கள் இருவரும் சத்தம் போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். 
தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார். இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப் பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். 

அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களு க்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. 

அதில் உள்ள மர்மத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப் படுத்தினார்கள். அப்போது ராக்கியின் நடவடிக்கை யில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். 

ஆனால் அவர் கணவர் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட தாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார். இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத் தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது கள்ளக் காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது. வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறி உள்ளது.


சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற் காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பி விட்டு ராக்கி கள்ளக் காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த நேரம் வினோத் வீட்டிற்கு வந்து விட்டதால் அந்த காட்சியை நேரில் பார்த்து ஆத்திர மடைந்தார். 

இதனால் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக் கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.
இதைத் தொடர்ந்து கள்ளக் காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப் படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)