கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர் !

0
நாகர்கோவி லில் உள்ள ஒரு கல்லூரியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும், அந்த கல்லூரியில் படித்து வருகிறார். சமீப நாட்களாக அந்த மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அவரது நடவடிக்கை களில் மாற்றம் ஏற்பட்டது.
செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் !


வீட்டில் உள்ள அனைவரிடமும் சிரித்துப் பேசி பழகி வந்த அந்த மாணவி மவுனமானார். அவரது முகத்தில் சோகம் படர்ந்து காணப்பட்டது. கல்லூரி பாடங்கள் காரணமாக அவர் அப்படி இருக்கலாம் என்று நினைத்த பெற்றோர் முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. 

ஆனால் நாட்கள் கடந்த போதும் அந்த மாணவியின் நடவடிக்கை களில் மாற்றம் ஏற்படாததால் கவலை அடைந்த பெற்றோர் அந்த மாணவியிடம் விசாரித்தனர். முதலில் பெற்றோரிடம் மாணவி தனக்கு எதுவும் ஆகவில்லை, தான் வழக்கம் போல் தான் இருப்பதாக கூறி அவர்களை சமாதானப் படுத்தினார்.

ஆனால் பெற்றோர் அதை நம்பாமல் அவரை வற்புறுத்தி கேட்ட போது மாணவி கூறிய தகவல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மாணவி படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ரஞ்சன் என்பவர் அந்த மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததாக கூறி மாணவி கதறி அழுதார். அந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்று தடை உள்ளது. 

இந்த நிலையில் அந்த மாணவி கல்லூரிக்கு ஒரு நாள் செல்போன் கொண்டு சென்ற போது பேராசிரியர் ரஞ்சன் அதை கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் செல்போனை மாணவியிடம் இருந்து பறிமுதல் செய்து விட்டார். அதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்யப் போவதாக அவர் கூறியதால் மாணவி அவரிடம் போனை தந்து விடும் படி கூறி கெஞ்சினார். 

அந்த மாணவியை ஒரு அறைக்கு வந்து அந்த செல்போனை பெற்றுக் கொள்ளும்படி கூறி விட்டு பேராசிரியர் சென்று விட்டார். வேறு வழியில்லாத தால் மாணவியும் அவர் கூறியபடி கல்லூரியில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு மாணவியின் வரவை எதிர் பார்த்து காத்திருந்த பேராசிரியர் அவர் வந்ததும் அவரது கையைப் பிடித்து இழுத்து செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரது கையை தட்டி விட்டு விட்டு அங்கிருந்து கண்ணீருடன் ஓடி உள்ளார். இந்த விவரங்களை மாணவி தனது தோழிகளிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் மாணவியை ஆறுதல் படுத்தி உள்ளனர். அதன் பிறகும் தொடர்ந்து அந்த பேராசிரியர் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளு க்கு இது பற்றி தகவல் கொடுக்கப் பட்டது. அவர்களும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புகார் கூறப்பட்ட பேராசிரி யரிடமும் விசாரணை நடந்தது. அப்போது மாணவிக்கு அந்த கல்லூரியில் பேராசிரியர் மூலம் செக்ஸ் கொடுமை நடந்தது உண்மை என்பது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நாகர்கோவில் மகளிர் போலீசார் இந்த புகார் பற்றி பேராசிரியர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர். தற்போது அந்த பேராசிரியர் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நாகர் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)