வேறு ஒருவருடன் குழந்தைபெற்ற காதலியை அனுப்புமாறு காதலன் போராட்டம் !





வேறு ஒருவருடன் குழந்தைபெற்ற காதலியை அனுப்புமாறு காதலன் போராட்டம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
திருவேற்காட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் கணவர் மற்றும் 2 குழந்தைக ளுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம் பெண் திடீரென குழந்தைக ளுடன் மாயமானார். இதுபற்றி அவரது கணவர் பூந்த மல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வேறு ஒருவருடன் குழந்தைபெற்ற காதலி


விசாரணையில் அந்த இளம்பெண் தனது திருமணத்து க்கு முன்பு காதலித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முரளி என்பவரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து இளம் பெண்ணை வரவழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும் காதலனுடன் வாழ விரும்புவ தாகவும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இளம் பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விசாரணை நடத்துவதற் காக முரளியையும் போலீசார் வரவழைத்து இருந்தனர். காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் போலீசாருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டார்.


தன்னுடன் தான் காதலியை அனுப்ப வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையம் எதிரில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் செய்வது அறியாது திகைத்த போலீசார் முரளியின் காதலியை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி முரளியை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்க செய்தனர். 

முரளி கீழே இறங்கியதும் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் பெண் விவகாரத்தில் எந்த முடிவு எடுப்பது என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)