திருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் !

0
திருப்பதியி லிருந்து திருமலைக்கு 2-ம் மலைப் பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண் டிருந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. 
திருப்பதியில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம்


பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந் தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)