கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்த இளைஞர் - மனைவியின் சகோதரி !

0
சேலத்தில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொண்ட இளைஞர், தற்போது அந்த பெண்ணின் பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண் புகார் அளித்துள்ளார். சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல் மாவட்டம் குமார பளையத்தைச் சேர்ந்தவர் இளவரசியை காதலித்து வந்துள்ளார். 
கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்த இளைஞர்


இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப் படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளவரசி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை யடுத்து கார்த்திக்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி 11ம் தேதி போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கார்த்தியின் பெற்றோர், இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. 

திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்ப வில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்ப தாகவும் சேலம் போலீசில் இளவரசி புகார் அளித்துள்ளார். 

முன்னதாக இளவரசி, தனது சகோதரியை கார்த்திக் காதலிப்பது போல் நாடகமாடிய தாகவும், அவருக்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்து சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)