டாக்காவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த இரு பயங்கரவாதிகள் !

0
டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவாதிகள் சுதாரித்துக் கொண்டு தாக்குதலை நடத்தி யுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். 
டாக்காவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள்
இருதரப்பு இடையே சண்டை நடைபெற்ற போது பயங்கரவாதி களால் சமாளிக்க முடிய வில்லை. இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர் என சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது கூறியுள்ளார். அவர்கள் யாரென்பதை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அவசியமாகும். 


மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார். இதற்கிடையே வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவியை போலீஸ் கைது செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாமிடமும் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது.

தற்கொலை செய்துக் கொண்டவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர். 

இதனை யடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக் கப்படும் நபர்கள் மீது படைகள் நடவடிக்கையை மேற்கொண்டது. தேசம் முழுவதும் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் 100 -க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர், பலர் கைது செய்யப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)