மின்சாரம் பாய்ச்சி மாணவியை கொன்ற பிளஸ்-2 மாணவர் !





மின்சாரம் பாய்ச்சி மாணவியை கொன்ற பிளஸ்-2 மாணவர் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
திண்டுக்கல் அருகே மாணவி மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக, அவள் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப் பட்டது அம்பலமாகி யுள்ளது. இது தொடர்பாக பிளஸ்-2 மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். 
மின்சாரம் பாய்ச்சி மாணவியை கொன்ற மாணவர்


கடந்த 16-ந் தேதி மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். பின்னர் வேலை முடிந்து மாலையில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற போது மாணவி மின்வயரை வாயில் கடித்தபடி பிணமாக கிடந்தாள். 

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து போலீசார் மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

அப்போது மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கூறி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் உள்ளது. அவளை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து குற்றவாளி களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை யடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் மாணவியின் எதிர் வீட்டில் உள்ள பிளஸ்-2 மாணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-


கடந்த 16-ந் தேதி பள்ளி மாணவி மட்டும் வீட்டில் இருந்தாள். இதனை கவனித்த மாணவர் நைசாக மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இருப்பினும் அவர் மாணவியின் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் மாணவி மயங்கி விழுந்தாள். 

இதனால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் மாணவன் வீட்டில் இருந்த மின்வயரை எடுத்து மாணவியின் வாயில் வைத்து மறுமுனையை மின் இணைப்பு கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சேலத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)