ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் - செங்கோட்டையன் !

0
கோபி அருகேயுள்ள குள்ளம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த அமைச்சர் செங்கோட்டையன், செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திட்ட மிட்டபடி நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9-30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார். 
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை


மாணவ, மாணவிகள் எஸ்எம்எஸ், ஆன்லைன் மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றும், பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல் படிப்பிற்குச் செல்லவும் வாழத்துக் களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

தோல்வி யடைந்த மாணவர்கள், ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உடனடி தேர்வை எழுதி வெற்றி பெற்று இதே ஆண்டில் கல்லூரிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)