பாஜக ஆட்சி அமைத்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு !

0
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்ட சபைகளு க்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற் குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார்.
பாஜக ஆட்சி அமைத்தால் ஒரு ரூபாய்க்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு !


ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இவற்றால் மாநிலத்தில் உள்ள சுமார் 3.26 கோடி மக்கள் பயனடை வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)