கள்ள காதலனுடன் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் !

0
உத்திரமேரூர் அருகே வீட்டு வேலை பார்க்க அழைத்து சென்று, சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக் காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 45). 


அவரது கள்ளக் காதலன் அற்புதராஜ் ஆகியோர் வீட்டு வேலைக்காக அழைத்து சென்றனர். பின்னர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினர். மேலும் சிறுமி விபசாரத்தில் ஈடுபட்டபோது வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி யிடம் புகார் செய்தனர்.

பெண் கைது

அவரது உத்தரவின் பேரில் பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் ராஜா தாமரை பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராணி, சப் -இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் வேளாங் கண்ணியையும், அற்புத ராஜையும் தேடி வந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் கோனேரிக் குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வேளாங் கண்ணியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

விசாரணையில் வேளாங் கண்ணியின் கணவர் காணிக்கைராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு இறந்து விட்டார், அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வேளாங்கண்ணி காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த போது அற்புத ராஜூடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக் காதலாக மாறியது. இருவரும் காஞ்சீபுரம் கோனேரிக் குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். 

மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமிகளை வீட்டு வேலைக்கு அனுப்பும் தொழிலும் செய்து வந்தனர். அற்புதராஜ், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்து பிரச்சினைக்கு உள்ளானவர் என்றும் கூறப் படுகிறது.


வலைவீச்சு

கைது செய்யப் பட்டுள்ள வேளாங் கண்ணியிடம் மதுராந்தகம் டி.எஸ்.பி. மகேந்திரன் மற்றும் போலீசார், வேறு சிறுமிகள் யாராவது பாதிக்கப் பட்டு உள்ளனரா?, இவர்களுக்கு பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறை வான அற்புதராஜையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)