அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று அக்கட்சி யின் ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வரு மான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித் துள்ளார்.
தேமுதிக உடனான பேச்சு வார்த்தை இழுபறி யில் இருந்து வரும் நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறி யிருப்பது தேமுதிக அதிமுக கூட்டணி யில் விரைவில் சேரும் என்ற எதிர் பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த கூட்டணி யில் காங்கிரஸ், விசிக, மதிமுக, 2 கம்யூனிஸிட் கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக தரப்பில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில், கூட்டணி குறித்து அதிமுக ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வரு மான ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், ''வர விருவிருக்கும் மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணி யில் இன்னும் சில கட்சிகள் இணை வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று கூறி யுள்ளார்.
Thanks for Your Comments